26/04/2026
10 ஆண்டுகளில்( 2017 முதல் 2026 வரை நங்கவள்ளி வழியாக புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் எத்தனை விடப்பட்டுள்ளது ?
நங்கவள்ளி வழியாக புதிய வழித்தடத்தில் இந்த இரண்டு முதலமைச்சர்களது ( EPS , MKS ) ஆட்சி காலத்தில் அரசுப் புதியப் பேருந்துகள் ஒன்று கூடவிடவில்லை என்று முகநூலில் பதிவிட்டுருந்தேன்.
பேருந்துகள் விட்டவிபரங்கள் நினைவுள்ள சிலர், மே 4 ந்தேதிக்கு பிறகு ஆட்சி அமைந்த உடன் புதிய அரசு பேருந்துகள் விடலாம் என்று கருத்திட்டுருந்தனர். ஒரு சிலர் எப்படி இப்படி சொல்லாம், இது தவறு என்றும் கருத்திட்டுருந்தனர்.
இது பற்றி ஆதாரத்துடன் 2015 ஆம் ஆண்டில் நன்றி அறிவிப்பு அறிக்கையினை இங்கு பதிவிடுவதன் மூலம் 2017 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை சுமார் பத்து ஆண்டுகளில் புதிய அரசுப் பேருந்துகள் நங்கவள்ளி வழியாக எத்தனை விடப்பட்டுள்ளது என்பதை தாங்களே தெரிந்து கொள்ளலாம்.
மேலும், 76 நெ அரசு நகர பேருந்து இப்பொழுது விடவில்லை. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சிங்கிள் ( நடை) விடுவதும், ஆறு மாதத்தில் அந்த பேருந்தை நிறுத்துவதும், பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு சிங்கிள் விடுவதும் , தற்போது ஒரு சில ஆண்டுகளாக நகரப் பேருந்துகள் நெ 34 மற்றும் நெ 35 நெ 24, நெ O 11 ஒரு சிங்கிள் மாற்றி இயக்குவது அரசுப் போக்குவரத்து கிளை பணிமனை (டிப்போ) யில் அவ்வப்போது சூழ்நிலைக்கு ( வசூல் குறைவு, பொதுமக்கள் கோரிக்கை ) தகுந்தபடி செயல்படும் நிலைதான் ஆண்டாண்டு காலங்களாக இருந்து வருகிறது. இது நிரந்தரம் அல்ல. இது சாதனையும் அல்ல.
அதனால், யார் ஆட்சி அமைத்தாலும் நங்கவள்ளி வழியாக புதிய அரசு பேருந்துகள் இம்முறை விடப்படும் என்பதில் மாற்றமில்லை என்றே கருதுகிறேன். நன்றி.
-நங்கவள்ளி ந.பெகோ.,