New look tending

New look tending #தமிழால்_யாதும்_அறிவோம்_1000�

இரும்புச்சத்துக்கு பேரீச்சம் பழம் மட்டும் போதுமா?? பொதுவாக சமூகத்தில் நிலவும் நம்பிக்கை யாதெனில், பேரீச்சம் பழங்கள் இரும...
13/05/2026

இரும்புச்சத்துக்கு பேரீச்சம் பழம் மட்டும் போதுமா??

பொதுவாக சமூகத்தில் நிலவும் நம்பிக்கை யாதெனில், பேரீச்சம் பழங்கள் இரும்புச் சத்தை உயர்த்தி ரத்த சோகையை குணப்படுத்தும் என்பதாகும்.

பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பது உண்மை.
எனினும்,
பேரீச்சம் பழங்கள்
மட்டுமே சாப்பிட்டால் போதும்- ரத்த சோகை குணமாகும் என்பது மாற்றத்துக்கு உட்படுத்த வேண்டிய நம்பிக்கையாகும்.
பேரீச்சம் பழத்தில் இருக்கும் இரும்புச்சத்தை விட
அதில் எலும்புகளின் வலிமைக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இதய நலனுக்குத் தேவையான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியமும் அதிகமாக உள்ளது.
எனினும் ஏனைய பல இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் குறைவான இரும்புச்சத்து கொண்ட பேரீச்சம் பழம் "இரும்புச்சத்து அதிகம் கொண்டது" என்ற பெயர் பெற்று விட்டது.

இக்கட்டுரையில் நாம் ரத்த சோகை என்றால் என்ன? இரும்புச்சத்தின் தேவை என்ன? உணவின் மூலம் கிடைக்கும்
இரும்புச்சத்தின் இரண்டு வகைகள்,
இரும்புச்சத்து நிரம்பிய உணவுகள் குறித்தும்
விரிவாகக் காண்போம்.

முதலில் ரத்த சோகை என்றால் என்ன? அதை எவ்வாறு உணவு மூலம் சரிசெய்வது எப்படி என்பதைப் பற்றிக் காண்போம்.

ரத்த சோகை

நமது உடலில் சராசரியாக இருக்க வேண்டிய ரத்த சிவப்பு அணுக்களிலும் ஆக்சிஜனைக் கடத்தும் விகிதத்திலும் ஏற்படும் குறைபாட்டு நோய் "ரத்த சோகை" ( அனீமியா) எனப்படும்.

ரத்த சிவப்பு அணுக்களில் "ஹீமோகுளோபின்" எனும் புரதம் உள்ளது.
இதில் ஹீம் எனும் இரும்புச்சத்தும், குளோபின் எனும் புரதச்சத்தும் இணைந்து உள்ளன.

ஹீமோகுளோபினின் பணி

நுரையீரலால் சுத்தீகரிக்கப்பட்ட ஆக்சிஜனை உடல் முழுவதும் ஏற்றிச் செல்லும் படகாக இந்த ஹீமோகுளோபின் செயல்படுகிறது.
ஹீமோகுளோபின் நன்றாக இருந்தால் தான், சிவப்பு அணுக்கள் நன்றாக ஆரோக்கியமாக இருக்க முடியும்.
ஹீமோகுளோபின் நன்றாக இருக்க வேண்டும் என்றால், இரும்புச்சத்தை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.

இரும்புச்சத்தின் தேவை

ஒரு ஹீமோகுளோபின் மூலக்கூறு உருவாவதற்கும், நான்கு இரும்புச்சத்து அணு தேவை.
நம் உடலில் உள்ள ட்ரில்லியன் கணக்கான செல்கள் சுவாசிக்கவும், ஆற்றல் உருவாக்கத்திற்கும், டி.என்.ஏ, ஆர்.என்.ஏ, புரதங்கள் உருவாக்கப்படுதல், மரபணுக்கள் வெளிப்படுதல் ஆகிய முக்கிய பணிகளுக்கு இரும்புச் சத்து இன்றியமையாததாகும்.

இரும்புச்சத்தை நமது உடலால் உருவாக்கிக் கொள்ள இயலாது என்பதால் நாம் நமது உணவின் மூலம் மட்டுமே இரும்புச் சத்தை அடைய முடியும்.

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு நாறொன்றுக்கு
0.27 மிகி இரும்பும்,
மாதவிடாய் நிகழும் வயதில் இருக்கும் பெண்கள் 18 மிகி இரும்பும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கும், ஆண்களுக்கும் தினசரி 8 மிகி இரும்பும்,
கர்ப்பிணி பெண்களுக்கு 27 மிகி இரும்புச்சத்தும் தினசரி தேவையாக இருக்கிறது.

ஒரு மனிதனின் உடலில் சராசரியாக 3 முதல் 4 கிராம் இரும்புச்சத்து இருக்கிறது.
அதில் நான்கில் மூன்று பங்கு - ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின், தசைகளில் உள்ள மயோகுளோபின் ஆகியவற்றில் அடங்கியுள்ளன.
ஒட்டுமொத்த இரும்புச் சத்தில் 20-30% , ஃபெரிடின் மற்றும் ஹுமோசிடரின் எனும் புரதங்களாக பின்னாள் தேவைக்காக சேமிக்கப்படுகிறது.

நாம் உணவில் உட்கொள்ளும் இரும்புச்சத்து சிறு குடல் பகுதியில் உறிஞ்சப்பட்டு, ட்ரான்ஸ்ஃபெரின் எனும் புரதம் மூலம் கடத்தப்பட்டு எலும்புகளின் மஜ்ஜையை அடைகிறது. அங்கே சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு உபயோகிக்கப்படுகிறது. தேவைக்கும் மிகுதியான இரும்புச்சத்து கல்லீரலில் ஃபெரிடினாக சேமிக்கப்படுகிறது.

இரும்புச்சத்து குறைபாட்டினால் ரத்த சோகை எப்போது ஏற்படுகிறது?

- உணவு மூலம் தேவையான அளவு உட்கொள்ளாத போது
- இரும்புச்சத்தின் தேவை அதிகமாக இருக்கும் போது ( கர்ப்பிணி, பாலூட்டும் அன்னை)
- இரும்புச் சத்து அதிகமாக வெளியேறும் போது
( காயம் மூலம் உதிரப்போக்கு,

மேற்கூறிய மூன்று காரணங்களில் "இரும்புச்சத்து குறைபாட்டு ரத்த சோகை" ( IRON DEFICIENCY ANEMIA) ஏற்படும்.

ரத்த சோகையின் அறிகுறிகள்

- உடல் சோர்வு
- சிந்தித்தல் திறன் குறைபாடு
- எதிர்ப்பு சக்தி குறைபாடு
- தலைசுற்றல்
- சோம்பேறித்தனம்
- நாக்கு வெளிறிப் போதல்

சிறியவர் முதல் பெரியவர் வரை, குறிப்பாக மாதவிடாய் பருவத்து மகளிரும், கர்ப்பிணிகளும் பாலூட்டும் அன்னையரும் தினசரி தங்களது இரும்புச் சத்துக்கு உணவைச் சார்ந்தே இருக்கிறார்கள்.

இரண்டு வகையான இரும்புச்சத்து

நாம் உண்ணும் உணவில் இருந்து நமக்குக் கிடைக்கும் இரும்புச்சத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. ஹீம் இரும்புச்சத்து
2. ஹீம் அல்லாத இரும்புச்சத்து

ஹீம் இரும்புச்சத்து என்பது விலங்குகள் சார்ந்த உணவுகளான கால்நடை மாமிசம், கோழி இறைச்சி, மீன்களிடம் இருந்து கிடைக்கும்.

இந்த வகை இரும்புச்சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் சதவிகிதம் ஹீம் அல்லாத இரும்புச்சத்தை விட அதிகமாகும்.

ஹீம் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்
- சுவரொட்டி
- மட்டி கிளிஞ்சல்
- ஈரல்
- கால்நடை இறைச்சி

2. ஹீம் அல்லாத இரும்புச்சத்து

தாவரம் சார்ந்த உணவுகளில் ஹீம் அல்லாத இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
தாவர உணவுகளில் ஹீம் இரும்புச்சத்து இருப்பதில்லை.

இந்த வகை, ஹீம் அல்லாத இரும்புச்சத்தை நமது உடல் கிரகித்துக் கொள்ளும் தன்மை ஒப்பீட்டளவில் குறைவாகும்.
எனவே, இரும்புச்சத்தை பெறுவதற்கு ஒப்பீட்டளவில் அதிகமான அளவில் நாம் தாவர உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அதாவது, நூறு கிராம் கால்நடை கல்லீரலில் 10 மிகி ஹீம் இரும்புச்சத்து இருக்கிறது என்றால்
அதே 100 கிராம் பேரீச்சம் பழத்தில்
1 மில்லிகிராம் ஹீம் அல்லாத இரும்புச்சத்து உள்ளது.
ஒப்பீட்டளவில் பத்து மடங்கு குறைவாக உள்ளது என்பதை அறியலாம்.

மருத்துவப் பயனாளர்களைச் சந்திக்கும் போது கூட , இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டிருக்கிறது என்று கண்டறிந்து கூறினால், அவர்களிடம் இருந்து தவறாமல் வரும் பதில் நான் தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருகிறேன் என்பதாக உள்ளது.

பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருக்கிறது. ஆனால் அதை விட அதிகமாக உடலுக்கு நன்மை தரும் எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் பொட்டாசியம், பாஸ்பரஸ் நிறைந்து உள்ளது.
கூடவே உடலுக்கு உகந்த பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவையும் அதிகமாக உள்ளன.
ஆயினும் இரும்புச்சத்து என்றால்
பேரீச்சம் பழம் என்ற பெயர் நிலைத்து விட்டது.

சிறியவர் முதல் பெரியவர் வரை ( நீரிழிவு மருத்துவப் பயனாளிகள், சிறுநீரக மருத்துவப் பயனாளிகள்) தவிர்த்து அனைவருமே தினசரி சில பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வருவது நன்மையே ஆயினும் அதில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதாக நம்பி சாப்பிடுவது மூடநம்பிக்கையாகும்.

ஹீம் அல்லாத இரும்புச்சத்து நிறைந்த தாவர உணவுகள்

தாமரைத் தண்டு வத்தல் ( நிறைய பேர் கேள்விப்பட்டிருப்பார்களா அறியேன்)
அதாவது உலர்த்தப்பட்ட தாமரைத் தண்டில் செய்யப்பட்ட வத்தலில் நூறு கிராம் எடைக்கு 60 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது.

சுண்டக்காய் வத்தலில் நூறுகிராம் எடைக்கு 22 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது.

கோதுமை உமியில் நூறு கிராமிற்கு 10.6 மில்லி கிராம் இரும்புச்சத்தும்,
பூசணி விதையில் 8.8 மில்லி கிராமும், எள்ளு 7.8 மில்லி கிராம், கேழ்வரகில் 4 மில்லிகிராம், முருங்கைக் கீரையில் 4 மில்லிகிராம் என
ஹீம் அல்லாத இரும்புச் சத்து நிறைந்துள்ளது.

அனைவராலும்
தினசரி மாமிசம் சார்ந்த உணவுகளை உண்பது என்பது நிதர்சனமில்லை.
எனவே, தாவர உணவுகளாக இருப்பினும் சரியே. இரும்புச்சத்து நிறைந்த தாவர உணவுகளை தேர்ந்தெடுத்து அவற்றை அதிகமாக சாப்பிட்டு வர வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால், FERMENTATION எனும் நொதித்தலுக்கு உள்ளான உணவுகளில் இரும்புச்சத்தின் வீரியம் அதிகரிப்பது உண்மை.

நூறுகிராம்
சமைக்கப்பட்ட சோற்றில் 0.34 மிகி மட்டுமே இருக்கும் இரும்புச்சத்து
12 மணிநேரம் முதல் 24 மணிநேர
நொதித்தலுக்குப் பின் பழைய சோற்றில் பத்து மடங்கு அளவில் கூடி 3.4 மில்லிகிராம் இரும்புச்சத்தாக மாற்றம் காண்கிறது.

தங்களது உணவில்
ஹீம் இரும்புச்சத்து நிரம்பிய உணவுகளையும்
தாவரம் சார்ந்த ஹீம் அல்லாத இரும்புச்சத்து உணவுகளையும்
தொடர்ந்து உட்கொண்டு வர வேண்டும்.

தாவரம் சார்ந்த இரும்புச்சத்து உட்கொள்ளும் போது அதனுடன் விட்டமின் சி நிரம்பிய பழங்களான கொய்யா, ஆரஞ்சு, நெல்லி, எலுமிச்சை, சாத்துக்குடி ஆகியவற்றையும் சேர்க்கும் போது
இன்னும் சிறப்பாக இரும்புச்சத்து கிரகிக்கப்படுகிறது.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணும் போது அதனுடன் ஃபைட்டிக் அமிலம் நிரம்பிய தானியங்கள், தேநீர், காபி, கால்சியம் அடங்கிய பால் பொருட்களை சாப்பிட்டால் இரும்புச்சத்து குறைவாகவே கிரகிக்கப்படும் என்பதையும் மனதில் கொள்க.

இரும்புச்சத்து குறைபாட்டுக்கு உள்ளாகி ரத்த சோகை கண்டறியப்படுபவர்களுக்கு வழங்கப்படும் மாத்திரை மருந்துகளில் ஹீம் அல்லாத இரும்புச்சத்து இருப்பதால் , இரும்புச்சத்து மாத்திரையுடன் விட்டமின் சி மாத்திரையும் சேர்த்து பாவிப்பது நல்ல பலனைத் தரக்கூடும்.

இதுவன்றி, ரத்த சிவப்பு அணுக்கள் நல்ல முறையில் உருவாகவும் முதிர்ச்சி பெறவும் வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகிய இரண்டும் அவசியமாகும்.
இவற்றின் பற்றாக்குறையால் ஏற்படும் ரத்த சோகையை "மெகாலோ ப்ளாஸ்டிக் அனீமியா" என்று குறிப்பிடுகிறோம்.

வைட்டமின் பி12 - மாமிசம், முட்டை, மீன், பால் பொருட்களில் நிரம்பியுள்ளது.
தாவர உணவுகளில் வைட்டமின் பி12 கிடைப்பதில்லை என்பதால்
வெஜிடேரியன் உணவுமுறையில் இருப்பவர்கள் தங்களின் உணவில் பால் மற்றும் பால் பொருட்களான யோக்ஹர்ட், சீஸ் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால், மருத்துவர் பரிந்துரையின் பேரில்
வைட்டமின் பி12 ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

பேரீச்சம் பழங்களில்
உடலுக்கு நன்மை தரும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவற்றை வெறும் சர்க்கரை மட்டுமே நிரம்பிய எந்த சத்தும் இல்லாத மிட்டாய்களுக்குப் பதிலாகவும் நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாகவும் தினசரி
குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
அவற்றில் இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்களுக்காக
மகளிர் உட்கொள்வதும் சிறந்தது.
எனினும் ரத்த சோகை குறைபாடுடையவர்கள் தங்களது இரும்புச்சத்து தேவைக்காக ஹீம் மற்றும் ஹீம் அல்லாத இரும்புச்சத்து நிரம்பிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து அதிகம் உண்பது மிகுந்த பலனளிக்கும்.
நன்றி இந்து தமிழ்

மறையாத கட்டுக் கதைகள் - 4

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

“சில நேரங்களில் ஒரு சாதாரண ஃப்ளாஷ் புகைப்படமே கண் புற்றுநோயை கண்டுபிடிக்க உதவலாம்.”அது ரெட்டினோபிளாஸ்டோமா (Retinoblastom...
10/05/2026

“சில நேரங்களில் ஒரு சாதாரண ஃப்ளாஷ் புகைப்படமே கண் புற்றுநோயை கண்டுபிடிக்க உதவலாம்.”

அது ரெட்டினோபிளாஸ்டோமா (Retinoblastoma) எனப்படும் நோயில் நிகழக்கூடும்.

ரெட்டினோபிளாஸ்டோமா என்பது கண்களின் ரெட்டினாவில் உருவாகும் ஒரு வகை புற்றுநோய். ரெட்டினா என்பது ஒளியை உணரும் கண் பகுதி. இது சிறிய குழந்தைகளில் அதிகமாக காணப்படும் தீவிர கண் கட்டி நோயாகும் மற்றும் பொதுவாக 5 வயதுக்கு முன்பே தோன்றுகிறது.

🚨 மிகவும் முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகளில் ஒன்று புகைப்படங்களில் தெரியக்கூடும்:

சாதாரணமாக ஃப்ளாஷ் போட்டோவில் கண் சிவப்பாக தெரியும். ஆனால் இந்த நிலையில், கண்களில் வெள்ளை அல்லது மஞ்சள் நிற ஒளி பிரதிபலிப்பது போல தெரியும். இதை “லூகோகோரியா” (Leucocoria) என்று அழைக்கிறார்கள். இது உடனடி கவனத்திற்கு உரிய அறிகுறியாக இருக்கலாம்.

🔹 காணப்படக்கூடிய மற்ற அறிகுறிகள்:
• கண் சாய்வு (Strabismus / “கண் விலகுதல்”)
• பார்வை குறைதல்
• தொடர்ந்து கண் சிவப்பு
• கண் வலி அல்லது வீக்கம்
• கண்ணிறை (Pupil) அளவில் மாற்றம்

⚠️ மிகவும் முக்கியமான விஷயம்:
இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது குழந்தையின் பார்வையையும், உயிரையும் கூட காப்பாற்ற முடியும்.

🩺 சிகிச்சை முறைகள்:
கட்டியின் அளவு மற்றும் பரவலைப் பொறுத்து சிகிச்சை மாறும். அதில்:
• லேசர் சிகிச்சை
• க்ரையோதெரபி (Cryotherapy)
• கீமோதெரபி
• கதிர்வீச்சு சிகிச்சை
• கடுமையான நிலையில் அறுவை சிகிச்சை
போன்றவை அடங்கும்.

இது அரிதான நோயாக இருந்தாலும், அதன் அறிகுறிகளை அறிந்திருப்பது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.



ஒரு ஆடம்பரமான எக்ஸ்பிடிஷன் க்ரூஸ் கப்பல், அரிய வகை வைரஸ் பரவலால் “மிதக்கும் தனிமைப்படுத்தல் மண்டலம்” போல மாறியதாக தகவல்க...
09/05/2026

ஒரு ஆடம்பரமான எக்ஸ்பிடிஷன் க்ரூஸ் கப்பல், அரிய வகை வைரஸ் பரவலால் “மிதக்கும் தனிமைப்படுத்தல் மண்டலம்” போல மாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வைரஸ் தாக்குதலால் மூன்று பயணிகள் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த கப்பல் அருகே பயணம் செய்துகொண்டிருந்த போது, பயணிகளில் தொடர்பான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. பொதுவாக இந்த வைரஸ், தொற்றுள்ள எலிகளின் கழிவுகள் அல்லது சிறுநீருடன் தொடர்பு ஏற்படும் போது பரவுகிறது.

ஆனால், கப்பலுக்குள் மனிதர்களிடையே நேரடியாக இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இத்தகைய மனிதர்-மனிதர் பரவல் மிகவும் அரிதானது. “Andes strain” எனப்படும் ஹாண்டா வைரஸ் வகையில் மட்டுமே இதுபோன்ற சில சம்பவங்கள் உலகளவில் பதிவாகியுள்ளன.

தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்த நிலையில், பல துறைமுகங்கள் ஆரம்பத்தில் அந்த கப்பலுக்கு அனுமதி மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது அந்த கப்பலுக்கு பகுதியில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து சுகாதார நிபுணர்கள் முழுமையான விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

— triste, à Inde.

சமநிலையான உணவுக்கான பரிந்துரைக்கப்பட்ட உலர் பருப்புகளின் அளவுகள் 🥜✨உலர் பருப்புகள் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, புரதம், வ...
09/05/2026

சமநிலையான உணவுக்கான பரிந்துரைக்கப்பட்ட உலர் பருப்புகளின் அளவுகள் 🥜✨

உலர் பருப்புகள் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. பல நன்மைகள் இருந்தாலும், அதிக கலோரி கொண்டதால் அளவோடு சாப்பிடுவது முக்கியம்.

🥜 தினசரி சராசரி பரிந்துரைக்கப்பட்ட அளவுகள்:

🌰 வால்நட் (Walnuts)
• 5 முதல் 8 வரை
• ஒமேகா-3 மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
• மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

🥜 முந்திரி (Cashew Nuts)
• 4 முதல் 5 வரை
• மக்னீசியம், சிங்க் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்தது
• ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது

🌰 பாதாம் (Almonds)
• 15 முதல் 30 வரை
• வைட்டமின் E மற்றும் நார்ச்சத்து நிறைந்தது
• நீண்ட நேர பசியை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

🥜 நிலக்கடலை (Peanuts)
• 18 முதல் 20 வரை
• தாவர புரதத்தின் நல்ல மூலமாகும்
• தசை மீட்பு மற்றும் ஆற்றலுக்கு உதவுகிறது

🌰 பிரேசில் நட் (Brazil Nuts)
• 1 முதல் 3 வரை மட்டும்
• செலினியம் மிகவும் அதிகம் கொண்டது
• நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தைராய்டு செயல்பாட்டிற்கு முக்கியமானது
• அதிகமாக சாப்பிட்டால் செலினியம் அதிகரித்து பாதிப்பு ஏற்படலாம்

🥜 பிஸ்தா (Pistachios)
• 20 முதல் 30 வரை
• நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
• கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவலாம்

🌰 ஹேசல்நட் (Hazelnuts)
• 10 முதல் 14 வரை
• நல்ல கொழுப்பு மற்றும் வைட்டமின் E நிறைந்தது
• தோல், இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

🥜 மகடேமியா (Macadamia Nuts)
• 14 முதல் 20 வரை
• மோனோ அன்சாசுரேட்டட் கொழுப்பு நிறைந்தது
• அதிக கலோரி கொண்டாலும் சத்தானது

🌰 செஸ்ட்நட் / கஸ்டன் வகைகள் (Chestnuts)
• 5 முதல் 7 வரை
• பசியை கட்டுப்படுத்தி முக்கிய தாதுக்களை வழங்குகிறது

அளவோடு எடுத்துக்கொண்டால், உலர் பருப்புகள் இதய ஆரோக்கியம், மூளை செயல்பாடு, பசியை கட்டுப்படுத்துதல் மற்றும் உடல் அழற்சியை குறைப்பதில் உதவுகின்றன.

ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், அதிகமாக சாப்பிட்டால் தினசரி கலோரி அளவு மிக அதிகரிக்கலாம்.



தினமும் 1 வாழைப்பழம் சாப்பிடுவதின் நன்மைகள்வாழைப்பழம் உலகிலேயே மிகவும் எளிதாக கிடைக்கும் மற்றும் சத்துகள் நிறைந்த பழங்கள...
09/05/2026

தினமும் 1 வாழைப்பழம் சாப்பிடுவதின் நன்மைகள்

வாழைப்பழம் உலகிலேயே மிகவும் எளிதாக கிடைக்கும் மற்றும் சத்துகள் நிறைந்த பழங்களில் ஒன்றாகும். தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு சக்தி, நல்ல ஜீரணம் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும் 💛

✅ வாழைப்பழம் என்ன சத்துகளை வழங்குகிறது?
• உடனடி சக்திக்கான கார்போஹைட்ரேட்டுகள் ⚡
• தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு பொட்டாசியம்
• ஜீரணம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கான நார்ச்சத்து
• வைட்டமின் B6 மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்
• இயற்கை சர்க்கரை, நீர் மற்றும் முக்கிய சத்துக்கள்

💓 இதய ஆரோக்கியத்திற்கு ஆதரவு
வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும், இதய தசைகள் உட்பட தசைகள் சரியாக செயல்படவும் உதவுகிறது.

🦠 ஜீரணம் & குடல் ஆரோக்கியம்
வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து:
• மலச்சிக்கலை குறைக்க உதவலாம்
• குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு ஆதரவாக செயல்படலாம்
• நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்க உதவலாம்

முழுமையாக பழுக்காத வாழைப்பழங்களில் “ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச்” உள்ளது. இது சிலருக்கு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்.

⚡ இயற்கையான சக்தி மூலமாக வாழைப்பழம்
எளிதில் ஜீரணமாகும் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால், உடற்பயிற்சிக்கு முன் பலர் வாழைப்பழம் சாப்பிட விரும்புகிறார்கள். இது உடலுக்கு உடனடி சக்தி அளிக்க உதவும்.

🧠 மூளை & மனநிலை ஆதரவு
வாழைப்பழத்தில் நரம்பு அமைப்பு சீராக செயல்பட உதவும் சத்துக்கள் உள்ளன. ஆனால் இது ஒரு “மாயமான மூளை சக்தி அதிகரிப்பான்” அல்ல.
மூளை ஆரோக்கியம் நல்ல தூக்கம், உடற்பயிற்சி, மனஅழுத்த கட்டுப்பாடு மற்றும் சமநிலையான உணவுமுறையின்மீது தான் அதிகம் சார்ந்துள்ளது.

⚠️ முக்கிய நினைவூட்டல்
ஆரோக்கியமான உணவுகளையும் அளவோடு சாப்பிட வேண்டும்.

கீழ்க்கண்டவர்கள் வாழைப்பழத்தை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்:
• தீவிர சிறுநீரக நோயுள்ளவர்கள்
• பொட்டாசியம் அளவை கட்டுப்படுத்த வேண்டியவர்கள்
• சில ஜீரண பிரச்சனைகள் உள்ளவர்கள்

✨ வாழைப்பழத்தை சாப்பிட சில எளிய வழிகள்
✔ பீனட் பட்டருடன்
✔ ஓட்ஸில் கலந்து
✔ ஸ்மூத்தியாக அரைத்து
✔ தயிர் மற்றும் பருப்புகளுடன்
✔ உடற்பயிற்சிக்கு முன் சிற்றுண்டியாக

🌱 அற்புத உணவுகள் அல்ல… தினசரி நல்ல பழக்கங்கள்தான் நீண்டகால ஆரோக்கியத்தை உருவாக்குகின்றன.



நீங்கள் நினைப்பதற்கும் மேலாக உங்கள் தினசரி பழக்கங்கள் உங்கள் உடல் மற்றும் மனநிலையை பாதிக்கின்றன…பலர் தங்களின் தினசரி பழக...
08/05/2026

நீங்கள் நினைப்பதற்கும் மேலாக உங்கள் தினசரி பழக்கங்கள் உங்கள் உடல் மற்றும் மனநிலையை பாதிக்கின்றன…

பலர் தங்களின் தினசரி பழக்கங்களே உடல் மற்றும் மனநிலையை நேரடியாக பாதிக்கின்றன என்பதை அறியாமல் உடல்நலக்குறைவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

குறைவான தூக்கம், அதிக சர்க்கரை உணவு, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, போதுமான தண்ணீர் குடிக்காதது அல்லது அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவது போன்றவை உடலின் முக்கிய செயல்பாடுகளான அழற்சி கட்டுப்பாடு மற்றும் இரத்த சர்க்கரை சமநிலையை பாதிக்கின்றன.

இவை அனைத்தும் உங்கள் உடல் சக்தி, மனநிலை மற்றும் சிந்தனை தெளிவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உடல் என்பது நீங்கள் தினமும் என்ன செய்கிறீர்களோ அதற்கு மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிலளிக்கும் ஒரு அமைப்பு. சிறிய “கெட்ட பழக்கங்கள்” கூட தொடர்ந்து நடந்தால் சோர்வு, எரிச்சல் அல்லது எப்போதும் உடம்பு சரியில்லை என்ற உணர்வாக மாறிவிடும்.

பிரச்சனை என்னவென்றால், பலர் எப்போதும் சோர்வாக இருப்பதையும், மலச்சிக்கலுடன் வாழ்வதையும் அல்லது அடிக்கடி கோபமாக இருப்பதையும் சாதாரண வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால், காலையில் எழுந்தவுடன் சக்தியின்றி இருப்பது சாதாரணமல்ல. செயல்பட காபி மீது மட்டும் நம்பிக்கை வைப்பதும், எப்போதும் வயிற்று வீக்கம் அல்லது உடல் வீக்கம் உணர்வதும் இயல்பானதல்ல.

அதேபோல், மெதுவான செரிமானம் அல்லது அடிக்கடி மனநிலை மாறுவதும் சாதாரணம் அல்ல.

இவை அனைத்தும் உங்கள் உடலில் ஏதோ ஒன்று சரியாக செயல்படவில்லை என்பதற்கான அறிகுறிகள். பல சமயங்களில் இது தவறான உணவுமுறை, உடற்பயிற்சி குறைவு, தரமற்ற தூக்கம் அல்லது சரியாக கையாளப்படாத நீண்டகால மனஅழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஆனால், எல்லா பிரச்சனைகளும் பழக்க மாற்றங்களால் மட்டும் சரியாகிவிடாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

சில நேரங்களில், ஒருவர் வாழ்க்கை முறையை மேம்படுத்தினாலும் உடல்நலக்குறைவு தொடரலாம். இதற்கு பின்னால் மறைந்திருக்கும் மருத்துவ காரணங்கள் இருக்கலாம்.

தைராய்டு பிரச்சனைகள், ஊட்டச்சத்து குறைபாடுகள், ரத்தச்சோகை அல்லது மனநல பிரச்சனைகள் போன்றவை இதேபோன்ற அறிகுறிகளை உருவாக்கக்கூடும்.

அதனால், உடல்நலக்குறைவு தொடர்ந்து இருந்தால் பரிசோதனைகள் செய்து உண்மையில் உடலில் என்ன நடக்கிறது என்பதை அறிதல் மிகவும் முக்கியம். “முயற்சி போடுங்கள்” என்பதிலேயே எல்லாம் முடிவதில்லை.



உயிர்க்குறிகள்: உங்கள் உடல் அமைதியாக தெரிவிக்கும் முக்கிய சைகைகள்உங்கள் உடல் தொடர்ந்து தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கிற...
08/05/2026

உயிர்க்குறிகள்: உங்கள் உடல் அமைதியாக தெரிவிக்கும் முக்கிய சைகைகள்

உங்கள் உடல் தொடர்ந்து தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறது. அந்த தகவல்களின் மொழியே “உயிர்க்குறிகள்” (Vital Signs). இவற்றை அறிந்திருப்பது மருத்துவர்களுக்கு மட்டும் அல்ல, நமக்கும் உடல்நல மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது.

கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்

• இதய துடிப்பு (நிமிடத்திற்கு 60–100 துடிப்புகள்)
இதயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை காட்டுகிறது. மாற்றங்கள் மன அழுத்தம், நோய் அல்லது இதய பிரச்சினைகளை சுட்டிக்காட்டலாம்.

• ஆக்சிஜன் செறிவு (> 94%)
இரத்தம் எவ்வளவு ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது என்பதை அளவிடுகிறது. குறைந்த அளவு முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கலாம்.

• இரத்த அழுத்தம் (120/80 mmHg)
இரத்தம் நாளங்களில் செல்லும் அழுத்தத்தை குறிக்கிறது. தொடர்ந்து அதிகம் அல்லது குறைவாக இருந்தால் இதயம், மூளை மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம்.

• சுவாச வீதம் (நிமிடத்திற்கு 12–20 சுவாசங்கள்)
உங்கள் சுவாச அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை காட்டுகிறது.

• உடல் வெப்பநிலை (36.2 – 37.5 °C)
அதிகரித்தால் தொற்று நோயைக் குறிக்கலாம்; குறைந்தால் aine மாற்றம் அல்லது சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சுட்டிக்காட்டலாம்.

• இரத்த சர்க்கரை அளவு (70–100 mg/dL)
உடலின் ஆற்றல் சமநிலைக்கு மிகவும் முக்கியமானது. மாற்றங்கள் நீரிழிவு போன்ற பிரச்சினைகளை குறிக்கலாம்.

• உடல் நிறை குறியீடு – BMI (18.5 – 24.9)
உடல் எடை மற்றும் உயரத்தை ஒப்பிட்டு ஊட்டச்சத்து நிலையை அறிய உதவுகிறது.

• நரம்பு நிரப்பு நேரம் (< 2 விநாடிகள்)
உடலின் வெளிப்புற இரத்த ஓட்டம் மற்றும் திசுக்களின் இரத்தப் பாய்ச்சலை மதிப்பிடுகிறது.

• சிறுநீர் உற்பத்தி (0.5 – 1 ml/kg/மணி)
உடலின் நீர்ச்சத்து நிலை மற்றும் சிறுநீரக செயல்பாட்டை காட்டுகிறது.

• நுரையீரல் திறன் (4–6 லிட்டர்)
சுவாச திறன் மற்றும் நுரையீரலின் செயல்திறனை குறிக்கிறது.

உங்கள் உடலைக் கேளுங்கள் — முன்னெச்சரிக்கையாக இருங்கள்

இந்த அளவுகள் வெறும் எண்கள் அல்ல; அவை உங்கள் உடல்நிலையின் முக்கிய சைகைகள். நீண்டகால மாற்றங்கள் அல்லது சாதாரண அளவை மீறிய மதிப்புகள், உடலில் ஏதோ சரியாக இல்லை என்பதற்கான முதல் அறிகுறியாக இருக்கலாம்.

உங்கள் உயிர்க்குறிகளை அறிந்திருப்பது, உங்கள் உடல்நலத்தை பாதுகாக்கும் முதல் படியாகும்.

---

குறிப்பு:
இந்த தகவல் கல்வி மற்றும் விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இது மருத்துவ பரிசோதனைக்கு மாற்றாக அல்ல. ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் தகுதியான மருத்துவரை அணுகவும்.



யாழில் இளைஞன் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள்: துணிந்து செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!யாழ்ப்பாணம், பண்டத்தரிப...
08/05/2026

யாழில் இளைஞன் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள்: துணிந்து செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் குழுவொன்றினால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞன் தாக்கப்பட்ட போது ஏராளமான பொதுமக்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்த போது, அந்த பகுதியால் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துணிச்சலாக செயற்பட்டு, தாக்கப்பட்ட இளைஞனை காப்பாற்றியதுடன், தாக்குதல் நடத்தியவர்களை விரட்டிச் சென்று ஒருவரை மடக்கிப் பிடித்தார்.

இன்று (8) காலை இந்த சம்பவம் நடந்தது.

இளைஞன் ஒருவரை 3 பேர் கொண்ட குழுவொன்று சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியுள்ளது. தலைக்கவசத்தினால் தாக்கப்பட்ட இளைஞன் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

பண்டத்தரிப்பு நகரத்தில் நடந்த இந்த சம்பவத்தை, ஏராளமான பொதுமக்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.

கடமை முடித்து சிவில் உடையில் சென்று கொண்டிருந்த இளவாலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தரான மதுராஜ், இந்த மோதல் சம்பவத்தை அவதானித்து, விரைவாக செயற்பட்டு, தாக்கப்பட்ட இளைஞனை காப்பாற்றியுள்ளார்.

பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை விரட்டிச் சென்று, ஒருவனை மடக்கிப் பிடித்துள்ளார்.

மடக்கிப் பிடிக்கப்பட்ட இளைஞன் இளைவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். தாக்கப்பட்ட இளைஞன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வில்லாத இதயம்‼️⁉️💞நாம் கருவாக உருவானதிலிருந்து இறப்பு வரை நிற்காமல் துடித்துக் கொண்டே இருக்கும் இதயம், தன் வாழ்நாளில்...
07/05/2026

ஓய்வில்லாத இதயம்‼️⁉️

💞நாம் கருவாக உருவானதிலிருந்து இறப்பு வரை நிற்காமல் துடித்துக் கொண்டே இருக்கும் இதயம், தன் வாழ்நாளில் சுமார் 300 கோடி முறை மட்டுமே துடிக்கும். 🤐

💞இந்த அற்புத உறுப்பை ஆரோக்கியமாகப் பராமரிப்போம. 💞

பயத்துக்கு சவால் விடும் ஜெயந்தி..பிராமண இன பெண் பிணத்தை எரிக்கிறார்..நாமக்கல் அருகே கூலிப்பட்டி கிராமத்துல பிறந்தவ நான்....
07/05/2026

பயத்துக்கு சவால் விடும் ஜெயந்தி..
பிராமண இன பெண் பிணத்தை எரிக்கிறார்..

நாமக்கல் அருகே கூலிப்பட்டி கிராமத்துல பிறந்தவ நான். அப்பா பட்டுகுருக்கள், சிவன் கோயில் அர்ச்சகர். எங்க வீட்டுல மூணு பொண்ணுங்க. நான்தான் கடைசிங்கிறதால, அப்பாவுக்கு என் மேல ரொம்ப பாசம். எம்.ஏ முடிச்ச நேரத்துல வேற ஜாதியைச் சேர்ந்த வாசுதேவனைக் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்கம்மா, அக்கா எல்லோரும் என்னை ஒதுக்க, அப்பா மட்டும் எதிர்க்கல. கணவர் வீட்டுல என்னை ஏத்துக்கிட்டாங்க. எனக்கு ரெட்டைக் குழந்தைகள் பிறந்தன

என் அப்பா திடீர்னு இறந்துட்டாரு. அவரை அடக்கம் பண்ணும்போது, பெண்ணா இருந்தாலும் நான் அங்கே இருந்தேன். அப்போ ஓர் உடலா இல்லாம, தெய்வமாதான் தெரிஞ்சாரு எங்கப்பா. நான் தையல் வேலை கத்துக்கிட்டு, அதை செய்திட்டிருந்தேன். தையல் மெஷினை மிதிக்க மிதிக்க வயித்துவலி அதிகமாக... டாக்டர், வயித்துல ரெண்டரை கிலோ கட்டி இருக்கிறதா சொன்னாங்க. சீரியஸான நிலையில ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனேன். உயிர் பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. எங்கப்பாதான் தெய்வமா இருந்து அறுவை சிகிச்சையில் என்னைக் காப்பாத்திக் கொடுத்தார்.

வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் என்ற குடும்பச் சூழலில்தான், கொஞ்சம் வருஷத்துக்கு முன்ன இந்த மின்மயானத்துல தோட்டப் பராமரிப்பு வேலைக்காக வந்தேன். இடிபாடுகளாவும், மண்டை ஓடு, எலும்புகளாவும் இருந்த இடத்தை, நானும், மலர்னு ஒரு பெண்ணும் சேர்ந்து மூணே மாசத்துல பச்சைப்பசேல் தோட்டமா மாத்தினோம். சில மாசங்கள்ல, சிதையூட்டிட்டு இருந்த ஆண்கள் வேலையை விட்டுப் போக, நான் அந்த வேலையைச் செய்றேன்னு நிர்வாகத்துக்கிட்ட கேட்டேன். ‘உன்னோட கணவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தா வேலை தர்றோம்'னு சொல்லிட்டாங்க. வீட்டுல எல்லாரையும் சம்மதிக்க வெச்சு இந்த வேலையில சேர்ந்தேன். என்னோட பணி நேர்த்தியைப் பார்த்து, ஒரே வருஷத்துக்குள்ள, என்னையே இந்த மின்மயானததுக்கு மேனேஜர் ஆக்கிச்சு நிர்வாகம்’’ என்ற ஜெயந்தி, தொடர்ந்தார்.

‘‘இறந்தவங்களோட உறவினர்களை எல்லாம் வெளிய அனுப்பிட்டு, நான், எனக்கு உதவியா மலர்னு ரெண்டு பொம் பளைங்க மட்டும், டிராலியில உடலை வைக்கிறதுல இருந்து, கடைசி வரைக்கும் எல்லா வேலைகளையும் செய்தாலும், கொஞ்சம்கூட பயந்ததில்ல. அதுக்காக சிதையூட்டும் வேலை சுலபமானதும் இல்ல. இயற்கை மரணம் எய்தினவங்களை சிதையூட்டும்போது, 45 நிமிஷத்துல சாம்பலை எடுத்திடலாம். ஆனா, போஸ்ட் மார்ட்டம் பண்ணின உடலா இருந்தா, சிதையூட்டின கொஞ்ச நேரத்துலயே, சூட்டுல எல்லா உறுப்புகளும் தனியா சிதறி விழும். அதை எல்லாம் மறுபடியும் எடுத்து, மரக்கட்டை மேல போடணும். சிரமமான அந்த வேலைகளை, தைரியமா பண்ணியிருக்கேன்.

ஒரு நாளில் அதிகபட்சமா 9 உடல்கள் வரை, பின்னிரவு வரைகூட இருந்து சிதையூட்டி இருக்கேன். அநாதைப் பிணங்களை இலவசமா சிதையூட்டுவேன். சின்ன வயசுல, பக்கத்துல யாராச்சும் முட்டை சாப்பிட்டாகூட மூக்கை மூடிக்குவேன். இப்போ பிண வாடை பழகிப் போச்சு. அதான் வாழ்க்கை!’’ என்ற ஜெயந்தியின் கண்களிலும் படர்கிறது சிரிப்பு.
~மகிழா. 💃
- மீள் பதிவு. (2015 பதிவு )
🌹🌹🌹🌹🌹🌹

நீங்கள் தினமும் செய்வது — நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை நினைப்பதைக் காட்டிலும் அதிகமாக பாதிக்கிறது…பலர் உடல் மற்று...
07/05/2026

நீங்கள் தினமும் செய்வது — நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை நினைப்பதைக் காட்டிலும் அதிகமாக பாதிக்கிறது…

பலர் உடல் மற்றும் மனநிலையிலான சோர்வை அனுபவிக்கிறார்கள்… ஆனால் அதன் முக்கிய காரணம் அவர்களின் தினசரி பழக்கங்கள் என்பதைக் கவனிக்காமல் இருக்கிறார்கள்.



😴 தவறான பழக்கங்கள் என்ன செய்யும்?
• போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது
• அதிக சர்க்கரை உணவு உட்கொள்ளுதல்
• உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை
• போதுமான தண்ணீர் குடிக்காதது
• மொபைல்/ஸ்கிரீன் முன் அதிக நேரம் செலவிடுதல்

➡️ இவை அனைத்தும் உடலில் முக்கிய செயல்முறைகளை பாதிக்கின்றன:
• அழற்சி (inflammation) அதிகரிப்பு
• இரத்த சர்க்கரை (glucose) நிலைமாற்றம்



⚡ இதன் விளைவுகள்:
• குறைந்த ஆற்றல் (energy)
• மனநிலை மாற்றம்
• கவனம் குறைவு

உடல் என்பது மிகவும் உணர்திறன் கொண்ட அமைப்பு.
சிறிய “கெட்ட பழக்கங்கள்” கூட தினசரி மீண்டும் மீண்டும் நடந்தால்:
➡️ சோர்வு
➡️ எரிச்சல்
➡️ பொதுவான உடல் சுகமின்மை
போன்ற பிரச்சினைகள் சேர்ந்து பெரிதாகும்.



🚫 இது சாதாரணம் அல்ல!
பலர் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்:
• எப்போதும் சோர்வாக இருப்பது
• மலச்சிக்கல் (constipation)
• எரிச்சலுடன் வாழ்வது

➡️ ஆனால் இது இயல்பானது அல்ல.

❗ காலை எழும்போது ஆற்றல் இல்லாமை
❗ காபி இல்லாமல் இயங்க முடியாமை
❗ அடிக்கடி உடல் வீக்கம்
❗ மெதுவான செரிமானம்
❗ அடிக்கடி மனநிலை மாற்றம்

➡️ இவை எல்லாம் உடலில் ஏதோ சரியாக இல்லை என்பதற்கான அறிகுறிகள்.



🧠 முக்கிய காரணங்கள்:
• தவறான உணவு பழக்கம்
• உடற்பயிற்சி இல்லாமை
• தூக்கத் தரம் குறைவு
• நீண்டகால மன அழுத்தம் (chronic stress)



⚠️ ஆனால் ஒரு முக்கிய உண்மை:
அனைத்து பிரச்சினைகளும் பழக்கங்களால் மட்டுமே சரியாகாது.

சில நேரங்களில், நல்ல வாழ்க்கை முறையுடன் இருந்தாலும் உடல் நலம் சரியில்லாமல் இருக்கலாம்.

➡️ காரணமாக இருக்கக்கூடியவை:
• தைராய்டு பிரச்சினைகள்
• ஊட்டச்சத்து குறைபாடுகள்
• ரத்த சோகை (anemia)
• மனநலம் தொடர்பான பிரச்சினைகள்



🧪 எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
உங்கள் உடல் சுகமின்மை நீண்ட காலமாக தொடர்ந்தால்:
➡️ பரிசோதனைகள் செய்ய வேண்டும்
➡️ “சற்றே முயற்சி பண்ணு சரியாகிடும்” என்று நினைக்கக் கூடாது

உண்மையில் உடலில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதே முக்கியம்.



💡 முக்கிய கருத்து:
உங்கள் தினசரி பழக்கங்கள் உங்கள் ஆரோக்கியத்தை அமைக்கின்றன…
ஆனால், நீடித்த பிரச்சினைகளை எப்போதும் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும்.





Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when New look tending posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share